மதிப்பிற்குரிய எழுத்தாளர் அருண் நரசிம்மன் அவர்களுக்கு, வணக்கம்.
தங்கள் நாவலை பற்றி விரிவாக எழுத வேண்டியே இந்தப் பதிவு. நன்றி
—
திருச்சி ஶ்ரீரங்கத்தில் படித்த இயற்பியல் பட்டதாரி அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பு படிக்கச் சென்று அந்த கலாசாரத்தில் கலந்து என்ன கற்றுக்கொண்டார், பெற்றுக்கொண்டார் என்பதுதான் கதை.
தேசிகன் நரசிம்மச்சாரி என்ற கதைநாயகனின் பெயர்தான், அமெரிக்கன் தேசி என்று மாறியிருக்கிறது. நூல் ஏறத்தாழ சேட்டன் பகத்தின் நாவல் போன்றதுதான் என்று மேலோட்டமாக தோன்றும். ஆனால் வாசிக்கும்போது, அந்த நினைப்பே உங்களுக்குள் வராது. காரணம், அருண் நரசிம்மன் அந்தளவு தமிழ் இலக்கிய விஷயங்களை உள்ளே நுட்பமாக வைத்திருக்கிறார். தமிழ் பாசுரங்களை, திருக்குறள்களை சூழலுக்கு ஏற்ப நுணுக்கமாகப் பயன்படுத்தியிருப்பதால் நாவல் எழுநூறு பக்கத்திற்கு நீண்டாலும் பெரிய சோர்வு ஏற்படவில்லை. நிறைய இடங்களில் அவல நகைச்சுவை காட்சிகளை புன்னகையுடன் படிக்க முடிகிறது. எழுத்தாளரின் சொல்லாட்சி ஆச்சரியப்படுத்துகிறது.
Continue reading
அன்புள்ள ஆசிரியருக்கு,

