மார்கழி தை முடிந்து இன்றும் குளிர்கிறதே காலையில் பத்து மணிக்கும் மாநகரில் பல இடங்களில் பனிப்புகை போலிருக்கிறதே. உலகில் பல மாநகரங்களில் மாசுக் காற்றினால் இன்றளவில் ஆண்டு முழுவதும் இவ்வாறான பனிப்புகைக்காலமே. முன்பனி பின்பனி என்றில்லை நடுபனி கெடுபனி. அனைத்துமே பகலில் வெளிர் மஞ்சள் நிறத்தில்.
மதிபேசிக்களில் ‘க்ளீன் யேர் இண்டக்ஸ்’ போன்ற ஆப்புக்களின் வழியே சுற்றுச்சூழலையும் அவற்றின் மாசுக்களையும் பொறுப்பான குடிமகனாக நாள்தோறும் கவனித்து காரேரி அலுவலகம் சென்றதும் ‘இந்த நாடு நேரே நாய்களிடம் சென்றுகொண்டிருக்கிறது’ என்று சக மதிபேசித் தலைமுறையினரிடம் கையாலாகாத அறச்சீற்ற முறையீட்டில் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடும் என்னைப்போன்ற மற்றுமொரு ‘வாட்ஸப் வாரியர்’ ஆக இருக்கும் உங்களுக்கும் இது தெரிந்ததே.
உலக நாடுகளின் சுவாசக் காற்றுத் தரத்தின் அளவீடு மணிநேர துல்லியத்தில் [https://waqi.info/] இணையதளத்தில் கிடைக்கிறது. கார்பன் சல்பர் நைட்ரஜன் இவற்றின் ஆக்சைடுகள் சுவாசிப்பதால் காலப்போக்கில் கேடு என்றால் சாலைப் போக்குவரத்தினால் காற்றில் உலவும் துகள் மாசுக்கள் நுரையீரலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்பவை.
Continue reading