தொடர்கடி

Standard

2013-thodarkadi-arunn

அவள்: ஏரோப்ளேன்ல 50 செங்கல் இருக்கு; ஒண்ணு கீழே விழுந்தா மிச்சம்?

இவன்: 49

அவள்: ஓகே. யானைய ஃப்ரிட்ஜ் உள்ள எப்டி வெப்பே?

இவன்: பழைய ஜோக்; கதவ திறந்து.

அவள்: அப்ப மானை?
Continue reading

புதுவருடம், சுயபோகம்

Standard

[சொந்தக் கதைதான். விருப்பமில்லாவிடினும்  கண்டிப்பாக வாசியுங்கள். வேறு எதற்கு எழுதுகிறேனாம்… :-) ]

2013 இல் நுழைந்தாயிற்று.

புத்தாண்டு தீர்மானம்: ஒன்றாம் தேதி எழுதாதே. சுயபோகமாய் உளருவதை ஒருநாளாவது ஒத்திவை.

இடைக்காலத்தில், புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்வதற்கு அலைபேசியின் முகவரிப் பட்டியலை மேய்கையில், பெயர்களின் பின்னால் தேங்கியிருக்கும் பழைய சில்லறை மனஸ்தாபங்களே ஞாபகம் வருகிறது.

புத்தாண்டு தீர்மானம்: பழையன களை. வேறொரு வருடம் ‘புதுவருட அ(றி)வியல் உறுதிமொழிகள்’ என்பதில் சொன்னவைகளையும் சேர்த்து.

அலைபேசியில் என் அழைப்பை ஏற்ற அனைவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டேன். அலைபேசி எண் என்னிடம் இல்லாதவர்களை மட்டும் என்னால் அலைபேசியில் அழைக்க முடியவில்லை. புத்தாண்டு வாழ்த்துகளை மட்டும் சொல்லிவிட்டேன்.
Continue reading

இசை தடங்க(ல்க)ள் – மேலும் சில

Standard

மேலும் சில இசை தடங்கள். 2012 மார்கழி இசை விழா தாக்கத்தில்.

முதல் தவணையில் அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்த கல்யாணகுணங்கள் அனைத்தும், இவற்றிற்கும் பொருந்தும். ‘புண்படுத்தும்’ நகைச்சுவை ஒத்துக்கொள்ளாதவர்கள், பார்த்து வாசியுங்கள். இவ்வருடத்தில், இதற்குமேல் இவ்வகையில் தொடரமாட்டேன் என்று உறுதியளித்தால் வாசித்துவிடுவீர்கள்தானே.

*

விளக்கி அல்லது பாராட்டி எழுதியதை தெரிவிக்கையில் “ஐ கேண்ட் ரீட் டாமில் யார்” என்பவர்கள், பாதகமான விமர்சனங்களை தமிழில் எழுதுகையில் சரியாகப் புரிந்துகொண்டு அடுத்த கச்சேரியில் கேண்டீனில் சந்திக்கையில் பக்கத்து டேபிளை கவனிப்பது,

செம்மொழியின் வெம்மை அல்லது கலைஞர்களின் தன்மை.

*

மேற்படி கருத்திற்கு விதிவிலக்காக நான் சந்தித்த பாடகர், சஞ்சய் சுப்ரமண்யன்.

2009இல் அவர் கச்சேரியை விமர்சனம் செய்து எழுதியிருந்த கட்டுரையை படித்தபிறகும், இன்றும் என்னை உற்சாகப்படுத்தி தொடர்ந்து தமிழில் எழுதச்சொல்வது

செம்மொழியின் பெருமை அல்லது கலைஞர்களின் மேன்மை.

*
Continue reading

இசை தடங்க(ல்க)ள்

Standard

இவை மார்கழி மாதத்தில் சென்னையில் சபாக்களில் (நாளுக்கு மூன்று நான்கு கச்சேரிகள் என) சங்கீதம் கேட்கையில் மனத்தில் ஏற்படும் தடங்கள். விமர்சனங்கள் அல்ல. உபயோகமான கருத்துகள் எனவும் சொல்லமுடியாது.

அதற்காக ரஞ்சகமானவை என்றும் தீர்மானித்துவிட முடியாது. ‘புண்படுத்தும்’ நகைச்சுவையுடன் இருப்பதால், வாராந்திரிகளில் வெளிவராது. தணிக்கை போக மிச்சம் ஏதும் வெளிவந்தால், “இசை துக்கடாக்கள்” என்றோ “சங்கீத சிப்ஸ்” என்றோ தலைப்பிடுவார்கள் (அழகிய பாடகிகள் படங்களுடன் அவர்கள் கடைக்கண்ணிற்கு அருகே பிரசுரிப்பார்கள்).

அனைத்தையும் இசை வம்புகள் என வகைப்படுத்தமுடியாது. சுவாரஸ்யமானவை எனலாம். அதானாலேயே இலக்கியத் தகுதியை இழந்துவிடலாம். அதானாலென்ன, நஷ்டம் இலக்கியத்திற்குதானே.

வாசித்து ‘வையுங்கள்’.

*
Continue reading

2012 டிசெம்பர் சங்கீத விழா: திருச்சூர் சகோதரர்கள் கச்சேரி

Standard

திருச்சூர் சகோதரர்கள் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நடத்திய கச்சேரி பற்றிய என்னுடைய சிறு விமர்சனம் இன்றைய (22/12/2012) ‘தி ஹிண்டு’ நாளிதழில் வெளியாகியுள்ளது.

Brothers in Harmony

நான் அனுப்பிய வடிவம் இங்கு உள்ளது.

இரு வடிவத்தையும் கவனமாக வாசிப்பவர்கள், சென்றமுறைகளைக் காட்டிலும் இம்முறை பிரசுரமான வடிவின் எடிட்டிங், எழுத்தாசிரியர் கூறவந்த கருத்துகள் சிதையாவண்ணம், சீராக அமைந்துள்ளதை கவனிக்கலாம். என் கருத்துகளை ஏற்று, உடன் அடுத்த ‘ரிவ்யூவில்’ செயல்படுத்திய “மார்கழி அன்லிமிட்டெட்” எடிட்டருக்கு என் நன்றிகள்.

[தமிழில், விரைவில்…]

2012 டிசெம்பர் சங்கீத விழா: அஸ்வத் நாராயணன் கச்சேரி

Standard

அஸ்வத் நாராயணன் கச்சேரி பற்றிய என்னுடைய சிறு விமர்சனம் இன்றைய (19/12/2012) ‘தி ஹிண்டு’ நாளிதழில் வெளியாகியுள்ளது.

நான் அனுப்பிய வடிவம் இங்கு உள்ளது.

இவ்விமர்சனங்கள் வழக்கமான “ஃப்ரைடே ரெவ்யூஸ்” பக்கங்களில் அல்லாமல், பிரதான நாளிதழ் உள்ளேயே (ஏழாம் பக்கத்தில்) இடம்பெறுவதால், சுருக்கமாய் 400 வார்த்தைகளுக்கு மிகாமல், இசை பரிச்சயம் இல்லாதவர்களும் வாசிக்கலாம் என்பதை மனதில்கொண்டு எழுதப்படவேண்டும் என்பது கட்டுப்பாடு.

நீங்கள் கர்நாடக இசை பிரியர் என்றால், 800 வார்த்தைகளையும் கடந்து இதிலுள்ளவைகளை வாசிக்கமுடியும். என்சாய் :-)

[தமிழில் விமர்சனங்களை தனிக்கட்டுரையாக பிறகு தொகுத்து வழங்குகிறேன்]

2012 டிசெம்பர் சங்கீத விழா: ‘தி ஹிண்டு’ கட்டுரை

Standard

2012 டிசெம்பர் சங்கீத விழாவையொட்டி ‘தி ஹிண்டு’ நாளிதழில் ‘மெட்ராஸ் மியுஸிக் அகாடமி’ பற்றிய என் ‘லைட் ரீடிங்’ கட்டுரை இன்று பிரசுரமாகியுள்ளது.

Academy, the house of bards

music_academy_jpgகோட்டோவியம் அளித்த கேஷவ்-விற்கும், ஏற்றுக்கொள்ளும் வடிவில் இக்கட்டுரையை வெளியிட்ட நல்ல எடிட்டருக்கும் நன்றி [எதற்கும் இங்கும் அங்கும் பார்த்துவிட்டு வாசியுங்கள்].

பூசிமொழுகியிருக்கும் எனதைவிட சுந்தர்ராவ் மற்றும் தாதாபாய் என்று ’குந்தளம்’ வாத்தியம் வாசிப்பர்களை கோலப்பன் பேட்டிகண்டு அமைத்திருக்கும் கட்டுரை நேரடியானது; அறச்சீற்றம் கொள்ளவைப்பது.

The fading beat

சார்ந்த கானொளி

 

டிஜிட்டலில் செதுக்கிய தலையா

Standard

2012-aru-dec-02

இரண்டு நாள்கள் முன்னர் மொட்டை அடித்துக்கொண்டேன்.

ஏன் என்று காரணம் கேட்டால், இப்படிச்சொல்லலாம். சலூனுக்குச் சென்று நம் முடியையும் கொடுத்து நம் காசையும் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூகச் சோகங்களில் ஒன்று. அதட்டிக் கேட்டால் ஒருக்கால் வெட்டியதை எடுத்துச்செல்லுங்கள் என்று திருப்பிக்கொடுக்கலாம். பிறகும், நம்மிடம் முன்னர் இருந்தது இப்போதும் நம்மிடமே உள்ளது, ஆனாலும் காசை கொடுக்கவேண்டியுள்ளதே என்று சோகம் மீளும், நீளும். எப்படியும் கொடுக்கப்போகும் காசிற்கு ‘மிகுதியான பலனாய்’ இருக்கட்டுமே என்றும், இப்படிச் செய்தால் மீண்டும் சலூன் செல்வதற்கு ஆறு மாசமாவது பிடிக்கும், காசு மிச்சம், என்றும்தான் மொட்டை. சுருக்கமாய், மிட் லைஃப் க்ரைசிஸ்.

மொட்டையின் பக்கவிளைவுகள் பல. வெளிப்பக்க விளைவுகள் நிதர்சனம். பின்வருமாறு.
Continue reading

2012 டிசெம்பர் சங்கீத விழா: ஒரு நூற்றாண்டு நினைவு விழா அனுபவம்

Standard

[எழுதியவர்கள்: அருண் நரசிம்மன், லலிதா ராம்]

1912இல் திருச்சி மாவட்டம் வராஹனேரியில் ஜூன் மூன்றாம் தேதி பிறந்த ஒரு கர்நாடக சங்கீத வித்வானின் நூற்றாண்டு நினைவு விழாவிற்கு நேற்று மாலை சென்றிருந்தோம். சென்னை போக்குவரத்தை எங்கள் வாகனத்தில் கலந்தாலோசித்துக் கதைத்துக் கலைந்து சற்று தாமதமாக சபாவை அடைகையில், ஐந்தரை மணி என்று சொன்ன நேரத்திற்கு விழாவை தொடங்கிவிட்டிருந்தனர் என்பது தெரிந்தது. அவ்விழாவின் சொற்பமான நேர்த்தியான நிகழ்வுகளில் அது முதன்மையானது.

தொடர்ந்து சொல்வனம் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் வாசிக்கலாம்.

அறிவியலும், சந்தை அறிவியலும்

Standard

சந்தை இலக்கியம் என்று சில பத்தாண்டுகளுக்கு முன் தமிழ் எழுத்துச்சூழலில் அறியப்பட்ட எழுத்துவகை இருந்தது நாமறிந்ததே. ‘சந்தை’, சமீபகாலமாக ‘வணிக’ அல்லது ‘கேளிக்கை’ என்று மாறியுள்ளது. வாசிப்பனுபவத்தில் அதற்கான தேவையும் பங்களிப்பும் இருந்தாலும், சந்தை இலக்கியத்தின் ரசனை என்பது வாசிக்கும் மக்கள் தொகையின் பொதுவான சராசரியை கவ்வி நிற்பது. சந்தை இலக்கியத்திற்கு விற்பனையே குறி. இதைப்போலவே ‘சந்தை அறிவியல்’ என்று ஒரு வகை உள்ளது. இன்று பரிமளிக்கிறது.

‘சந்தை அறிவியல்’ ஊடகச் செல்வாக்கினால் முக்கியமாக, ராக்ஷஸமாக வளர்ந்துவரும் இணையத்தினால், வளர்த்தெடுக்கப்பட்ட ‘பாப்புலர் சயன்ஸ்’ வகையின் வீழ்ச்சி. பாப்புலர் சயன்ஸ் என்பதை பரப்பறிவியல் (பொதுமக்களிடம் பரப்பும்வகையில் பகிரப்படும் அறிவியல்) என்றால், சந்தை அறிவியலை பரபரப்பு அறிவியல் எனலாம்.

இவ்வளவு நாள் மனித அறிவுக்கலனில் தொகுத்துள்ள அறிவியல் புரிதல்களை எதிர்த்தோ, அல்லது மாற்றியமைக்கும் வகையிலோ புதிய ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளதாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்துவது. பலசமயம் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் அப்படித்தான் கூறுகிறார்களா என்பதை சரிபார்க்காமலேயே. சிலசமயங்களில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளும் பரபரப்பிற்குப் பலியாவது துரதிருஷ்டம். விரைவான புகழுக்காகவோ, அல்லது தங்கள் ஆராய்ச்சி மான்யத்தை தக்கவைத்துகொள்ளும் நிர்பந்தங்கள் போன்றவைகளில் சிக்கியோ ஊடகங்களைத் திரட்டி, பிரஸ்-மீட் வைத்து விளம்பரம் தேட விழைகிறார்கள். கடந்த இரண்டு மூன்று வருடங்களில் இணையத்தில் பிரபல செய்திவெளியீட்டு நிறுவனங்களின் அறிவியல் செய்திகளை கவனித்துவந்தாலே இது தெரியும்.

செல்போனினால் சிட்டுக்குருவிகள் அழிவு; தேனீக்களும்தான்; மனித மூளையும் பாதிக்கப்படுகிறது; செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்; கொட்டாவி மூளையின் சூட்டைத் தணிக்கிறது; ஒளியை விஞ்சும் நியூட்ரினோக்கள்: கவுந்தார் ஐன்ஸ்டின்; கண்டுவிட்டோம் ‘கடவுள் துகள்’; ஆர்செனிக்கை உண்ணும் பாக்டீரியா: உயிரியல் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்கவேண்டியதே; இப்படியாப்பட்ட ‘அறிவியல் செய்திகள்’.

செல்போன் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தாலும், சிட்டுக்குருவிகள் திரும்பிவந்துவிட்டதாய் ஒரிரண்டு மாதங்கள் முன் செய்திவெளியானது (டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்) உங்களில் அநேகருக்குத் தெரியுமோ? தெரியாதிருந்தால் வியப்பில்லை; ‘பரபரப்பிற்கு’ எதிராய் வரும் மறுப்புச் செய்திகளை, ஆதாரம் இருந்தாலும், அவ்வளவு விளம்பரப்படுத்தமாட்டார்கள். இதுவும் சந்தை அறிவியலின் அறிகுறி.

தேனீக்கள் அலைபேசியின் அலைகளினால் பாதிக்கப்படுகின்றன என்று இரண்டு வருடம் முன் (இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆராய்ச்சி சஞ்சிகையில்) வெளியான ஒரு ஆராய்ச்சியை, ஊடகச்செய்தியைக் கடந்து மூலத்தை — ஆராய்ச்சி கட்டுரையை — கவனித்து வாசித்துப்பார்த்தேன். தேனீக்கள் வசிக்கும் கூட்டினுள் அலைபேசியைப் போட்டுவிட்டு, அதனை தொடர்ந்து ‘டாக்-மோடில்’, அதிர்வு நிலையில் (வைப்ரேட்-மோடில்), சுமார் ஒரு மணிநேரம் வைத்திருந்து, அதனால் தேனீக்கள் பரபரப்பாய் வெளியேறிவிடுகின்றன. அலைபேசியை அண்டவில்லை என்று ‘நிறுவியுள்ளர்கள்’.

‘டிகிரி படிப்பு’ இல்லாத எழுத்தறிவு மட்டுமுள்ள எளியோருக்கும் வாசித்தவுடன் அன்றாடத்துடன் விலகியுள்ள இந்த ‘ஆராய்ச்சி முடிவுகளின்’ நிதர்சனம் புலப்பட்டுவிடும். ஆனால், சார்ந்த ஊடகச் செய்திகள் தலைப்பிலேயே “செல்ஃபோனினால் தேனீக்களுக்கு ஆபத்து; விஞ்ஞானிகள் அறிக்கை” என்று வருகிறது. யாரைக் குறை சொல்வது?

சென்ற வருடம் (2011) வாராந்திரியில் “எச்சரிக்கை ரிப்போர்ட்” பகுதியில் செல்ஃபோனை காதில் வைத்துப் பேசுகையில் மூளை பாதிக்கப்படும் ‘அபாயத்தை’ப் பற்றி ஒருபக்கத்தில் (கலர்படங்கள் போக இருக்கும் இடம் மிகாமல்) சுருங்கச்சொல்லி விளக்கியிருந்தார்கள். தலையின் ஒருபகுதியில் சிவப்பாய் வருமாறு கலரில் மனித முகமும் போட்டு, ஆராய்ச்சி முடிவுகள் இப்படித் தெரிவிப்பதாய் எழுதியிருந்தார்கள். கூடவே ஒரு மருத்துவரின் (அவர் படமும் உண்டு) பரிந்துரை. அலைபேசிகள் உபயோகத்தில் இருக்கையில் (பேசிக்கொண்டிருக்கையில்) மின்காந்தக் கதிரியக்க அலைகளை வெளிப்படுத்த வல்லவை. அதனால் மூளைக்கு அருகில் காதில் வைத்துப் பேசினால், மூளை பாதிக்கப்படலாம். ட்யூமர் வருமா என்பதற்கு ஆதாரம் இல்லை. எதற்கும் எச்சரிக்கையாய் நாம்தான் குறைவாய் பேசவேண்டும். இப்படிப் பரிந்துரைத்திருந்தார்.

மேற்படி பத்தியை மீண்டும் வாசித்துவிட்டு யோசித்துப்பாருங்கள். எளியோரான நம் புத்திக்கு எட்டாத எந்த “புதிய ஆராய்ச்சி” விஷயத்தை இந்த ‘எச்சரிக்கை ரிப்போர்ட்’ அளித்துள்ளது? இதில் வாச்சாங்குளி மேட்டர், அந்தக் கலர் படம்தான். இன்ஃப்ராரெட் தெர்மோகிராஃப் கொண்டு செல்ஃபோன் பேசுகையில் முகத்தில்/மண்டையில் வெப்பநிலையைக் குறிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படத்தைக் கொண்டு மூளை ‘பாதிக்கப்படும்’ என்று சொன்னால் சரியான வாதமில்லை. பாதிப்பு என்றால் என்ன? பாதகமாகவா, சாதகமாகவா? பாதகம் என்றால் மூளை அல்லது அதன் எப்பகுதி என்னவாகும்? மின்காந்த அலைகளினாலா? இயக்கம் மாறுபடுமா? இதை ஓரிரு டிகிரி அதிகமாகும் வெப்பநிலையைக் கொண்டு எவ்வாறு கணித்தார்கள் (ஏழெட்டு டிகிரி அதிகரித்தால் ஆளே அம்பேல்)? வெப்பநிலையால்தான் என்றால், வெந்நீரில் தலைக்கு குளித்தாலும் மூளை பாதிக்குமா? இப்படியெல்லாம் கேட்கப்போனால், கேள்விகளே அச்செய்தியின் அளவை விட நீண்டுவிடுகிறது. தொகுத்துக் கேட்டு பிரசுரமாக்குவதற்குள் அடுத்த வாரம் வேறு ‘எச்சரிக்கை’ வெளிவந்துவிடுகிறது.

சரி, நிசமாகவே செல்போனை மூளைக்கருகில் அதிக நேரம் வைத்திருந்தால் கேடா என்றால், அவ்வகை முடிவுகள் கொண்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை சென்றவருடம் (2011) வாசித்தேன். கூடவே “செல்போன்கள் மூளையின் இயக்கத்தை பாதிக்கவல்லவை” என்கிற வகைத் தலைப்பின் கீழ் ‘சந்தை அறிவியல்’ செய்தியும் வெளியாகியிருந்தது. பார்த்தவுடன் எரிச்சலூட்டும் தலைப்பு (மூளையை பாதிக்காத மனிதச் செயல்பாடு எது? கையை ஆட்டினாலும், காலை ஆட்டினாலும்-தான் மூளை ‘பாதிக்கப்படும்’). ஆராய்ச்சிக் கட்டுரை மூலத்தை வாசித்துப்பார்த்தேன். காதின்மேல் இருத்திக்கொண்டு செல்போனில் பேசினால், காதுப்பகுதியின் அருகாமையில் மூளையினுள் வெப்பநிலை உயருவதாய் நிறுவியிருந்தார்கள். அடடா, சரியாக இருக்கிறதே என்று மேலும் துழாவினால், பரிசோதனையில் செல்போனை ‘டாக்-மோடில்’ காதிற்கருகில் தொடர்ந்து ஐம்பது நிமிடம் பிடித்துக்கொண்டிருந்தால் இவ்வாறு மூளை சூடாகிறதாம். “கைவலிக்காதோ?” என்று ஒரு கேள்வி தோன்றினாலும், நான் கேட்க நினைத்தது: “ஒருவன் ஐம்பது நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால், அது மூளை இருப்பவன் செய்யும் செயல் என்று நிரூபிப்பதற்கே ஆதாரம் கேட்கவேண்டுமே; (கெட்ட வார்த்தையை நிரப்பிக்கொள்ளுங்கள்…), பின் அவனுக்கு இருப்பதாய் சந்தேகப்படும் அம்மூளை ஆராய்ச்சி நிரூபணத்தில் சூடானால் என்ன, சுக்கலாயிறமாய்ச் சிதறினால்தான் என்ன?”

ஆனாலும் இவ்வகை ‘சந்தை அறிவியல்’ செய்திகளைத் தொடர்ந்து உள்வாங்கும் நாம், செல்போன் பேசுவதினால் உண்மையில் நமக்கு எவ்வளவு, எப்படி ஆபத்து, எது பாதுகாப்பான செயல்பாடு என்றெல்லாம் அறிந்துகொள்ள மெனக்கெடுவதில்லை (நானும் இக்கட்டுரையில் எழுதப்போவதில்லை). செல்ஃபோனினால் மூளைக்கு ஆபத்து என்கிற ஒற்றைவரி பயம் மட்டும் நமக்குள் தங்கிவிடுகிறது. நாலுபேரை அலைபேசியில் அலறி அங்கலாய்த்துக்கொள்கிறோம்.

இது சந்தை அறிவியலையும் கடந்த மந்தை அறிவியல்.

*

ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்துடன் பயணம் செய்யும் நியூட்ரினோக்கள் உள்ளன என்று தடாலடியாக 2011இல் ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். ஓபெரா (OPERA) என்றழைக்கப்பட்ட இப்பரிசோதனையில், ஏற்பாட்டின்படி ஐரோப்பாவில் இரண்டு நகரங்களுக்கிடையே பூமிக்கடியில் பயணம் செய்த நியூட்ரினோக்களின் வேகங்களை அளப்பதற்கு பௌதிகப் பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள், பொறியியலாளர்கள் அடங்கிய குழு சில வருடங்களாய் முயன்று வந்தது. ஓபெரா குழுவின் ஒரு பிரிவு பரிசோதனை முடிவுகளை நவம்பர் 2011இல் வெளியிட்டது. சற்று அவசரமாக. வெளிவருகையிலேயே இம்முடிவுகள் அவசரமானவை என்று கருதி ஓபெரா பரிசோதனையில் உடன் வேலைசெய்த சில விஞ்ஞானிகள் குழுவாய் இம்முடிவுகளின் வெளியீட்டில் தங்கள் பங்கு வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டனர். தொடர்ந்து, நியூட்ரினோக்கள் அதியொளித் துகள்கள் (super luminary particles) என்பது நிரூபிக்கப்பட்டுள்ளபடியால், பிரபஞ்சத்தில் எப்பொருண்மையும் ஒளியைவிட வேகமாய் பயணம் செய்யாது என்கிற ஐன்ஸ்டைனின் சித்தாந்தம் மாறுதலுக்குட்படுத்தவேண்டியது அவசியமாகிறது என்று செய்தி வெளியானது.

தமிழில் கூட அறிவியல் அதன் செயல்பாடு, வாசகரின் புரிதலை மேம்படுத்த ஏதாவது அறிவியல் உப அங்கங்களின் விளக்கங்கள் என்று எந்த ஒரு உருப்படியான அறிவியல்கட்டுரையும் எழுதாதவர்களும், ஐன்ஸ்ட்டைன் தூக்கியடிக்கப்பட்டுவிட்டதாகவும்,“மாற்றம் என்பது மானுடத் தத்துவம்” என்று அன்றே பாரதிதாசன் சொல்லிவிட்டாராக்கும் என்றும் எழுதிச்சென்றார்கள். அறிவுத்துறைகளில் முக்கியமானதாய் ஏதாவது முன்னேற்றங்கள் உலகில் நிகழ்கையில் சட்டென தனக்கும் அது புரிந்து தெரிந்து செரித்துவிட்டதுபோல் ‘சர்வக்ஞராய்’ கருத்துசொல்வது சிலரின் இயல்பு.

என்னதான் பொதுமக்களிடம், முன்பு எப்போதுமில்லாத வகையில், உடனுக்குடன் பல அறிவியல் தளங்களில் நடக்கும் ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டு சேர்க்கிறது என்றாலும், இவ்வகை மிகைகளும் சார்ந்த மீள்-மிகைகளும் சந்தை அறிவியலின் முக்கியமான இடர். கைசொடுக்கும் நேரத்தில் ஒற்றை வரிச் செய்தி மிகைகளை வாசித்துத் ‘தெளிந்து’ தீர்க்கதரிசன மதிப்பீடுகளை கிடைக்குமிடத்தில் (இணையத்தில்) அரைபண்டித அறைகூவலாய் அழற்றுவதும் தவிர்க்க இயலாது.

அறிவியல் சிந்தையின்படி எந்தச்சித்தாந்தமும், கருதுகோளும், கட்டமைப்பும் எதிர் ஆதாரங்களுடன் மறுக்கப்படக்கூடியதே. ஐன்ஸ்ட்டினும் விலக்கல்ல. ஆனால் சித்தாந்தங்களின் திறனுக்கும் பொது அம்சத்திற்கும் ஏற்ப எதிர் ஆதாரங்களும் அவ்வளவு வலுவானதாக அமையவேண்டும். அப்போதுதான் மாற்றுச்சித்தாந்தம் பற்றி யோசிக்கத் தேவையேற்படும். இதைத் தினந்தோறும் அறிவியல் பழகிவரும் (நம்மாழ்வார் பொறுத்துக்கொண்டால்: ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும், அறிவியலே’ என்று பழகிவரும்) விஞ்ஞானிகள் அறிந்திருப்பவர்களே. அவர்கள் ‘சந்தை அறிவியல்’ கூவி விற்பதை எல்லாம் உடனடியாக ஏற்றுக்கொண்டு ‘அப்படியே சாப்பிடமாட்டார்கள்’.

இந்த “ஒளியை விஞ்சும் நியூட்ரினோ” சோதனை முடிவுகளை 2011இல் வெளிவந்தவுடனேயே “இது சந்தேகக் கேஸ், மேலும் பரிசோதனைகளை சரிபார்த்தால் இம்முடிவுகளின் துல்லியத்தில் சந்தேகம் வரும், ஐன்ஸ்ட்டைனை அவ்வளவு எளிதில் அகற்றமுடியாது” என்று சில பௌதிக ஆய்வாளர்களின் கருத்துகளையும், வலைதளங்களில் எழுதிய விளக்கங்களையும் ஊடகங்கள் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து பரிசோதனைகளின் முடிவுகளைச் செப்பனிட்டதில், இயந்திரத்தில் ஒரு இடத்தில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் சரியாகச் சொருகப்படவில்லை. அதனால், நியூட்ரினோக்களின் பயணத்தில் 60 நேனொ செகண்ட் ரத்து செய்துகொள்ளவேண்டுமா அல்லது கூட்டிக்கொள்ளவேண்டுமா என்பது சரிவரத் தெரியவில்லை என்று அறிந்துகொண்டனர். முன்னர் ஒளியைவிஞ்சும் வேகம் என்று குறிப்பிட்டதே இப்படி ஒளியின் வேகத்தைவிட நேனோசெகண்ட் பொழுதுகளினால் ஏற்பட்ட வேக வித்தியாசத்தை வைத்தே என்பதால், அம்முடிவுகள் துல்லியத்தில் வழுவின.

இதனால், சில மாதங்கள் கழித்து, பிப்ரவரி 2012இல் அதே விஞ்ஞானிகள் குழு புதிய முடிவுகளைச் சரிபார்த்துவிட்டு, ஆமாம், முன்னர் வெளியிட்ட முடிவுகளில் சில தோராயச்சுழிப்புகள் (ரவுண்டிங் ஆஃப்) நேர்ந்துவிட்டது; அதனால் அறிவித்ததில் பிழை. பயணம் செய்த நியூட்ரினோக்களின் வேகம் ஒளியின் வேகத்தைவிட அதிகமா என்பது திட்டவட்டமில்லை. அடுத்த சுற்று பரிசோதனைகள் தேவை. இப்போதைக்கு ஐன்ஸ்ட்டைனின் சித்தாந்தத்திற்கு பங்கமில்லை. இப்படி அறிவித்தார்கள். ‘சந்தை அறிவியல்’ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதற்குள் வேறு பரபரப்பான அறிவியல் விஷயங்களுக்குக் கடந்து சென்றுவிட்டது.

மேலே குறிப்பிட்ட தமிழ் எழுத்தின் அரைப்பண்டிதர்களும் சளைப்பதே இல்லை. நியூட்ரினொ புதிய முடிவுகளை கண்டுகொண்டார்களோ இல்லையோ, அதற்குள் வேறு விஷயத்திற்கு தாவி விட்டார்கள். உதாரணமாக, 2012-இற்கான பாண்டித்ய வெளிப்பாடாய் சமீபத்தில்கூட -– இருபது வருடமாய் பௌதிகம் சார்ந்து பயிற்சி, ஆய்வு மற்றும் ஆசிரியத்துவம் செய்துவருவோருக்கும் சட்டென்று புரிபடாத — “கண்றாவித் துகள்” பற்றி எளிதாக தங்கள் தீர்ப்புகளையும், தீர்க்கதரிசனங்களையும் இணையத்திலும், அரசியல் சஞ்சிகைகளிலும் எழுதிப்போகிறார்கள் (அறிவியலுக்கு என்று பிரத்யேகமாக சஞ்சிகைகள் வைத்துக்கொள்வது நம் பாரம்பர்யத்தில் தழைப்பதில்லை). மக்கள் காசுகொடுத்து வாங்கிப் படிக்கிறார்கள்.

மற்றொரு ‘சந்தை அறிவியல்’ உதாரணம், 2010இல் வெளிவந்த ஃபெலிஸா வுல்ஃப் சைமன் மற்றும் குழுவினரின் ‘ஆர்செனிக் பாக்டீரியா’ ஆராய்ச்சி முடிவுகள். இதைப் பற்றி “மாற்று உயிர்” என்கிற தலைப்பில் முன்னரே சொல்வனத்தில் சில கட்டுரைகள் எழுதியுள்ளோம். இவ்வாராய்ச்சி முடிவுகள் வெளிவருகையிலேயே எதிர்குரல்களும் துறை விஞ்ஞானிகளிடையே கிளம்பியது. தற்போது ஜூலை 2012இல் வெளிவந்துள்ள புதிய ஆராய்ச்சி முடிவுகள் ஆர்செனிக் பாக்டிரியா அவ்வகையில் ஆர்செனிக்கை மரபணு வரை கொண்டு சென்று ‘உணவாகக்’ கொள்ளும் வகையில் செயலாகவில்லை என்று கண்டுள்ளது. ஃபெலிஸா குழுவினரின் மாற்று உயிர், ஆர்செனிக் பாக்டிரியா பற்றி 2010இல் தடபுடலாய் செய்திகள், பேட்டிகள், படங்கள் என்று வெளியிட்ட ஊடகங்கள், மறுப்பாய் இரண்டு ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்தும், (ஓரிரு செய்திக்குறுங்கட்டுரைகள் தவிர்த்து) அதிகம் அவற்றை பிரபலப்படுத்தவில்லை. மாற்று உயிர் பற்றிய ஆராய்ச்சி இனியும் தொடரும். ஆனால் சார்ந்த “ஆர்செனிக் பாக்டீரியா” ஆராய்ச்சியோ துரதிருஷ்டவசமாக, சந்தை அறிவியலில் சிக்கிக்கொண்டது. இதற்கு ஒரு பெருங்காரணம் நாஸா-தான்.

ஆர்செனிக் பாக்டீரியா ஆராய்ச்சி விஷயத்தில் நாஸாவிடம் ஆராய்ச்சி மான்யம் பெறும் சில விஞ்ஞானிகள் உட்பட பலர் நாஸாவை சாடியதற்கு காரணம், நாஸாவும் தெரிந்தே ஊடகமிகையை உபயோகித்ததனால். திட்டவட்டமாக நிரூபிக்காத ‘முதல் சுற்று’ முடிவுகளையே ஊதிப்பெரிதாக்கி பரபரப்பான அறிவியல் செய்தியாய் ‘ப்ரஸ் மீட்’ வைத்து வெளியிட்டது. துறையில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளிடையே அறிவியல் விவாதங்களாக தொடரவேண்டியது, முதல்கட்டத்திலேயே துரதிருஷ்டவசமாக இவ்வாறான அதிக விளம்பரத்தினால் தரம்குறைந்த சர்ச்சையாக உருமாறியது. இது புரிகிறதோ தெரிகிறதோ எதற்கும் நம் கருத்தையும் சொல்லிவைப்போம், ஆக்கத்தை எதிர்க்கமுடியவில்லையெனில் ஆளை அடிப்போம், அது என் ஜனநாயக உரிமை என்கிற இணைய கலாச்சாரத்தின் இன்றைய பரிணாமம். எதிர்பார்க்கக்கூடியதே.

சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளும், முக்கியமாக ஃபெலிஸா வுல்ஃப் சைமன், விளம்பரப்பிரியர்கள், விஞ்ஞானத்தை முறைப்படி அணுகாதவர்கள் என்று விமர்சிக்கப்பட்டார்கள். ஆராய்ச்சி முடிவுகளின் மீது சக விஞ்ஞானிகளின் சந்தேகங்களின் தாக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் ஃபெலிஸாவின் தரப்பின் நம்பகத்தன்மை குறைந்துபோய், மேலும் பரபரப்பாய் “நீ பெரியவனா நான் பெரியவனா” என்கிற ரீதியில் சண்டை சிண்டுகள் முடியப்பட்டு, சில மாதங்களில் தூக்கிவைத்த நாஸாவே, ஃபெலிஸாவை கைக்கழுவிவிட்டது. முத்தாய்ப்பாய் செய்துவந்த ஆராய்ச்சி வேலை பறிபோன பரிதாபம் சந்தை அறிவியலின் லீலை.

இந்த விவகாரம் பற்றி விரிவாக ஆர்செனிக் பாக்டீரியா தற்காலிக அடக்கம் என்கிற கட்டுரையில் வாசிக்கலாம்.

அறிவியலின் ராணி என்றழைக்கப்படும், முடிந்தவரை தருக்கங்களாய், தியரம்-ப்ருஃப் என்று ஆராய்ச்சிகளை வெளிப்படுத்தும் கணிதத்தையும் ‘சந்தை அறிவியல்’ விட்டுவைக்கவில்லை. உதாரணமாய், கணிதத்துறையில் ஒரு அங்கமாய் பாய்மங்களின் (fluids) செயல்பாடுகளை விளக்கும் நேவியர்-ஸ்டோக்ஸ் (நேவியர்-இசுடோக்சு என்றும் எழுதலாம்) நுண்கணிதச் சமன்பாட்டிற்கு பொதுத்தீர்வு காண்பதென்பது “மில்லென்னியம் ப்ராப்ளம்” பட்டியலில் ஏழில் ஒன்று. பொதுத்தீர்வு காண்பவருக்கு கிளே கணிதவியல் நிறுவனம் மில்லியன் டாலர்கள் பரிசு வழங்கும். 2006இல் இவ்வகைத் தீர்வைக் கண்டுபிடித்துவிட்டதாய் அமேரிக்காவின் லீஹை பல்கலைகழகத்திலிருந்து பென்னி ஸ்மித் என்கிற பெண் பேராசிரியர்/கணிதவியலாளர் தன் ஆராய்ச்சிக் கட்டுரையின் முன்வடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துகொள்ளும் இணைய-ஆவணப்பெட்டகத்தில் வெளியிட்டார். வந்தது வினை.

இணைய-விளம்பரம் சில மணிநேரங்களில் வெடித்து பூதாகாரமாகி, இன்னமும் சக ஆராய்ச்சியாளர்கள் சரி தவறு என்று பரிந்துரைக்காத அந்த ஆராய்ச்சிமுடிவுகளைப் பற்றி அவரிடம் பேட்டி கண்டு, அவரும் அசட்டுத்தனமாய் சற்றே மிகையாய் பேட்டிகொடுத்தார். ஒரு சில வாரங்களில் அந்தத் தீர்வில் தவறு இருப்பது (ஆவணப்பெட்டகத்தில் வாசித்த சக கணிதவியலாலர்களால்) கண்டறியப்பட்டு, அவர் அக்கட்டுரையை வாபஸ் பெற்றுக்கொண்டார். இது ஆராய்ச்சியாளர்களிடையே சகஜம். தவறுகள் இருக்கலாமோ என்றுதான் முன்வடிவை பொதுப்பெட்டகத்திலும் வைத்திருந்தார் (யாராவது தவறுகளைச் சுட்டுவார்கள் என). ஆனால், எதிர்பாராமல் இலவசமாய் கிடைத்த கூடுதல் இணைய-விளம்பரத்தினால் மனங்குறுகிப்போனார். இணையத்தில் உலவும்/மேலோட்டமாய் வாசிக்கும் பலர் அனுதாபக் கடிதங்கள் எழுதியே அவரை வெறுப்பேற்றிவிட்டனர்.

சமீபத்தில் (2011) கூட கணினித்துறை-கணிதம் சார்ந்த “P=NP? ருசு” எனப்படும் (இது மற்றொரு ‘மில்லென்னியம் ப்ராப்ளம்’) அடிப்படைக் கேள்விக்கு விடை கண்டுவிட்டதாய் இந்திய வம்சாவளி அமெரிக்கர் வினய் தியோலலிக்கர் தீர்வு ஒன்றை வெளியிட்டார். சில நூறு பக்கங்களைக்கொண்ட இத்தீர்வு பெரும் பரபரப்பை இணையத்தில் ஆராய்ச்சியாளர்களிடையே, அவர்களது வலைப்பூக்களையும் செய்திகளையும் வாசித்துவரும் பொதுவாசகர்களிடையே ஏற்படுத்தியது.

இதற்குக் கிடைத்த ஊடகமிகை விளம்பரத்தைக்கண்டு கணினி-கணிதத்துறை பேராசிரியர் ஸ்காட் ஏரான்ஸன், “இத்தீர்வு நிச்சயம் தவறானது; சரியானது என்று நிரூபணமானால், மில்லியன் டாலர் பரிசுடன் என் சொத்து முழுவதையும் அந்நாருக்குக் கொடுக்கிறேன்” என்று பகிரங்கமாய் தன் வலைப்பூவில் எழுதிவைத்தார். எதிர்பார்த்ததைப்போலவே, இவ்வகை ‘மிகை எதிர்வினை’யினால் மூலச்செய்திக்கு அதிகவிளம்பரமே கிடைத்தது.

சில மாதங்களில் ஆர். ஜே. லிப்ட்டன் போன்ற ஓரிரு கணினி-கணிதவியலாளர்கள் மேற்படித் தீர்வில் முன்பிழைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, மொத்தக் கட்டுரையையும் பிழைத்திருத்தம் செய்வது வீண் என்று விலகிவிட்டனர். வெளியிட்டவரோ கட்டுரையை பொதுத்தளத்தில் இருந்து வாபஸ் பெறுவதாய் இல்லை. இழுபறி. சொத்தை அடமானம் வைத்தவர், வேறு யார் சரி தவறு என்று நிரூபித்தாலும் அவர்களுக்கும் இதே பரிசு என்று மறுஒலிபரப்பு செய்துவிட்டு, சாத்தியப்படும் வேறு ஆராய்ச்சி ஜோலிகளை கவனிக்கப்போய்விட்டார். இணையமிகையும் வேறு ஆளைப் ‘போட்டுதள்ள’ போய்விட்டது.

அறிவியல் துறைகளில் இப்படி அடிக்கடி ‘சந்தை அறிவியலில்’ மாட்டிக்கொண்டு விழிபிதுங்குவது சைக்காலஜி, சார்ந்த பிஹேவியரல்-சைக்காலஜி போன்றவைகளே. அதுவும் ‘டயட்-கட்டுரைகள்’ அறிவியல் எழுத்தின் டாப்-டென் மோசடிகளின் உறைவிடம். சாம்பிளுக்கு: காபி குடித்தால் உடலுக்கு நன்மை, உடலுக்கு தீமை, இதயம் பலவீனப்படும், இதயம் வலுப்பெறும், இப்படி எதிர்நிலையான முடிவுகளுடன் வருடாவருடம் புருடாக்கள். மெக்டொனால்ட்ஸில் டபுள் லேயர் சீஸ்-பர்கரையும், கூடவே கவனமாய் ‘டயட்-கோக்’கையும் மனத்தில் எவ்வித முரணுமின்றி ஆர்டர் செய்யும் ‘பகுத்தறிவான’ அமேரிக்கர்களுக்கென்றே எழுதப்படுபவை இவை. சமீபத்தில்தான் இவற்றை நாம் ஆங்கில நாளிதழ்களின் உப அவஸ்தைகளாய் இறக்குமதி செய்யத்துவங்கியுள்ளோம்.

முத்தாய்ப்பாய் சென்ற வருடம் படைப்பூக்கம் எப்படித் தோன்றுகிறது என்பதை சைக்காலஜி, நியூரோசயின்ஸ், சமூக அறிவியல் என்று பல துறைகளின் ஆராய்ச்சி முடிவுகளைக் கலந்தாலோசித்து ஐயம்திரிபற நிறுவுவதாக வெளிவந்த ‘இமாஜின்’ என்கிற ஜோனா லெஹரரின் புத்தகம். பெஸ்ட்-ஸெல்லர் தகுதி பெற்ற இப்புத்தகத்தின் உள்ளடக்கத்தின் ஓட்டைகளைச் சாடி பல விஞ்ஞானிகள் நியூயார்க் டைம்ஸ், கார்ட்டியன் என்று நாளிதழ்களில் எழுதிவிட்டனர். சமூக அறிவியல் என்றால் ஏதோ பௌதிகம் போன்ற கறார் கணிதமாதிரிகள் இல்லாதிருக்கலாம். ஆனால் செயல்-விளைவு போன்ற தொடர்புகளும் இல்லாமலா ஆராய்ச்சிகள் நடைபெறும் என்கிற விமர்சனத்திலிருந்து, புத்தகத்தில் வந்துள்ள பாப் டிலன் எப்படிப் பாட்டெழுதுகிறார் என்கிற ‘படைப்பூக்க இயக்கத்தின்’ கருத்துகளெல்லாம் லெஹரரின் படைப்பூக்கத்தின் சான்று என்பதுவரை. புத்தகம் தொடர்ந்து அமோகமாக விற்பனையாகிறதாம்.

தமிழிலும் மார்கெட் இருப்பதாய் நாம் சரியான தருணத்தில் கிளப்பிவிட்டால், வரும் 2013 புத்தகக் காட்சியில் ‘துரித-பிரசுரமாய்’ மொழியாக்கப் புத்தகம் வெளிவரலாம். ரிஸ்க் எடுத்து தமிழில் அறிவியல் புத்தகங்கள் பிரசுரிக்கும் பதிப்பாளர்களும் காசுபார்க்கவேண்டுமல்லவா.

*

அனைத்து அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளும் முதலில் சக ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் அத்துறை சார்ந்த சஞ்சிகைகளில் (மட்டும்) வெளிவரும். இன்றும் அப்படித்தான். அதிர்ச்சியான கிளர்ச்சியான புதிய முடிவுகள் வெளிவருகையில், ஆராய்ச்சி சஞ்சிகைகளை வாசிக்கும் விவாதிக்கும் அறிவியலாளர்களிடையே மட்டுமே சர்ச்சை கிளம்பும். “சங்கறுப்ப தெங்கள் குலம் சங்கரனார்க் கேது குலம்” என்று நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் கேட்பார்கள். அவர்களே மேலும் ஆராய்ச்சிகளின் மூலம், புதிய முடிவுகளை பரிசீலித்து, மீண்டும் அவ்வகை ஆராய்ச்சி சஞ்சிகைகளிலேயே தங்கள் முடிவுகளை கட்டுரைகளாய் வெளியிட்டு, சந்தேகங்களை ஓரளவு தீர்த்துகொள்வார்கள். புதிய அறிதல்களில் ஓரளவு சமநிலை கிட்டிய பிறகே, தற்காலிக சமாதானக் கொடி பறக்கவிடப்பட்டு, புதிய அறிவியல் கூற்றுகளாக அம்முடிவுகள் பிரச்சார அல்லது பரப்பறிவியல் புத்தகங்கள் மற்றும் செய்திகளில் வெளிவரும்.

இது இணையம் வளரும் வரையில் இருந்த நிலை. கடந்த இருபது ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. அமைப்பிற்கு எதிராய் அல்லது அதைக் கேள்விகேட்கும் வகையில் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருகையில் தடபுடலாக ஊடகங்கள் (தாங்கள் போனால் போகட்டும் என்று வைத்திருக்கும் அறிவியல் பக்கங்களில்) பிரசுரிப்பார்கள். ஆனால், இம்முடிவுகள் மறுதலிக்கப்படுகையில் அதே அளவு பிரஸ்தாபங்கள் இருக்காது. அதற்குள் விஷயம் அலுத்துவிடும். இல்லை வேறு பரபரப்பு விஷயத்திற்கு ஊடகங்கள் தாவியிருக்கும். அறிவியலையும் தகவலாய் அணுகிச், செய்திகளாய் ஆக்கி, பரபரப்பு பிரச்சாரம், பண்டம், விற்பனை, வியாபாரம், என்று ஊடகங்கள் களமிறக்குவதால் ஏற்படும் வினை இது. அதனாலேயே, அறிவியலை ஆராய்ச்சி நடக்கையிலேயே, தற்கால ஊடகங்கள் “சுருக்கமாக, சுவையாக” பொதுமக்களுக்கு எடுத்துச்செல்ல முனைகையில் இவ்வகைச் சிக்கல்கள் ஏற்படுகிறது.

ஆராய்ச்சிகள் இப்படித்தான் நடக்கும் என்பதை உணர்ந்துகொள்ளும் பக்குவத்துடன் இந்த “சந்தை அறிவியல்” செய்திகளை அணுகினால் சுவாரசியமாக இருக்கும். இல்லையேல் அறிவியல் சிந்தையின் பேரிலேயே சந்தேகமும், உவர்ப்பும் ஏற்படும். முன்னதை விட பின்னதுதான் அதிகம் நடக்கும் என்பதை மனித இயல்பிலிருந்து அறியலாம்.

சந்தை அறிவியலில் பகிரப்படும் ஒரு விஷயத்தின் உண்மை நிலை என்ன என்பதை எப்படி அறிவது? நேரடியாக ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்துப்பார்த்து தெளிவதுதான் சிறந்த வழி. இல்லையேல் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள், அத்துறை வல்லுநர்கள் என்று யாரேனும் அவற்றை வாசித்து அறிவியல் எது அவியல் எது என்று விளக்குவது மட்டுமே வழி. பல நேரங்களில் அவர்கள் தங்கள் துறைத் தேர்ச்சிக்கேற்ப, துறைப்பரிச்சயம் உள்ளவர்களுக்கு மட்டுமே அதிகம் புரியுமாறு விளக்குவார்கள்.

இதனால் ஆய்வாளர்களுக்கும் அத்துறையில் தேர்ச்சியற்ற சக மனிதர்களுக்கும் ஏற்படும் இடைவெளியில் (அதாவது, கிடைச்ச கேப்பில்), அறிவியல் இயங்கும் விதம் பற்றி சுத்தமான அக்மார்க் அறியாமையுடன் அரைப்பண்டிதர்கள் “சந்தை அறிவியல்” செய்திகளின் நுனிப்புல்மேய்ச்சல்களை சாதகமாக உபயோகித்து, “பாத்தியா, நாந்தான் சொல்றேனே, இந்த அறிவியலே எப்போதும் இப்படித்தான்; இப்படிம்பாங்க, அப்படிம்பாங்க; மொத்ததில் இவங்களுக்கே ஒண்ணும் புரியலே” என்கிற வகையில் எழுதுவார்கள். கொசுறாக எந்த நிரூபணத்திற்கும் உட்படுத்தவேண்டிய கட்டுப்பாடும் தேவையும் இல்லாத தங்கள் கருத்துக்களையும் ஏதோ ஆய்ந்தறிந்த ஆழ்ந்த உண்மைகள் போல இணைத்துவிடுவார்கள்.

உதாரணம் வேண்டுமென்றால்: “என்ன பெரிய மெடிக்கல் அட்வான்ஸ், மருந்து மாத்திரை எல்லாம் வேண்டிகெடக்கு; அறிவியல் மருந்துகளை கண்டுபிடிக்க கண்டுபிடிக்க, அம்மருந்திற்கு அப்பாற்பட்ட புதிய வியாதிகள் தோன்றிக்கொண்டே இருக்கும். ஐம்பது வருடம் முன்னால் யாராவது கான்சர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமா, இருபது வருடம் முன்னால் யாராவது எய்ட்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமா. எல்லாம் கடவுள் ஏற்பாடு” என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

ஆனால், கான்சர் எனும் நோய் மூவாயிரம் வருடம்முன்னர் பிரமிட் கட்டிய எகிப்தியர் காலத்திலிருந்தே இருந்துள்ளது என்பதை சமீபத்தில் அ-படைப்பிலக்கியத்திற்கு புலிட்ஸர் பரிசு வென்ற எம்பெரர் ஆஃப் மலடிஸ் (Emperor of Maladies) ‘பாப்புலர் சயின்ஸ்’ வகை புத்தகத்தில் சக இந்தியப் பெயருடைய (அமெரிக்க டாக்டர்) சித்தார்த் முக்கர்ஜி ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறார். இதை மேற்படிப் பண்டிதரிடம் குறிப்பிட்டால் “ஆமாம், எல்லாத்துக்கும் ஒரு ஆதாரம் கேளு; நிரூபணவாதமே மனத்தை உழப்பும் வீண்வாதம்… நம் முன்னோர்களுக்கு கான்சர் இருந்ததாக உனக்குத் தெரியுமா; இருந்திருந்தால், அன்றே சரகர் போன்ற மகாவைத்தியர்கள் ஆயுர்வேதத்திலேயே மருந்து கண்டு…” இப்படி அடுத்த தேசியவாத அரணிற்குள் நழுவிவிடுவார். போகிறபோக்கில் எதிர்வினையாற்றும் நம்மையும் சரகர் மற்றும் ஆயுர்வேதத்திற்கு எதிரிபோல் திரித்துவிடுவர். பேசித் தீராது இவ்வகை நோய்கள்.

முக்கியமாக, அறிவியலில் பொய்யாக்கமுடிந்த (falsifiable) கூற்றுகளை முன்வைக்கிறார்களே (அதனால்தானே அவ்வப்போது அடிவாங்குகிறர்கள்); இதேபோல், தங்கள் ‘பண்டிதக் கருத்துக்களும்’ பொய்யாக்கமுடிந்த கூறுகளினால் ஆனவையா, இல்லை “இவை நான் சொல்வதால் உண்மை” என்கிற வகை கருத்துக்களா என்பதை வகுக்கமாட்டார்கள். யோசித்தாலும், வெளியே சொல்லாமல் உணர்ச்சிப்பிழம்பாய், ரிட்டோரிக்கலாய், எழுதிக்குவிப்பார்கள்.

எந்த அறிவியல் கருத்தும் பொய்யாக்கத்திற்கு (falsification) உட்பட்டது. இது அறிவியல் சிந்தையின் முக்கியமான அங்கம். தனிச்சிறப்பும். ஊடகமும் அதன் மிகையும் தோன்றாக் காலந்தொட்டே, அறிவியல் இப்படித்தான் இயங்குகிறது. இயங்கவேண்டும். இப்படி பொய்யாக்கமுடியாத கருதுகோள்கள், அறிவியல் பிடிமானம் இருந்தாலும், சரி தவறு என்று நிரூபிக்கமுடியாததால் (சோதித்துப்பார்க்க அவ்வகை கூறுகளே இல்லாததினால்), சித்தாந்தமாய் சிலகாலம் சிலிர்த்துவிட்டுச் சிதிலமடைந்துவிடும்.

இயற்கையைத் தெளிந்துணர அறிவியல் ஒரு அறிதல்முறை மட்டுமே, அது ஒரு கட்டமைப்பு மட்டுமே என்பதுபோல் ஒரு கற்பிதம். மற்ற அறிதல் முறைகளிலிருந்து முக்கியமான வேறுபாடு, அறிவியல் பொய்யாக்கத்திற்கு உட்பட்டது. மாற்றுச் சித்தாந்தத்திற்கும், முடிவுகளுக்கும் ஏற்ப தன் அறிதல்களை புதுப்பித்துப் பகுத்துகொள்ளும், தொகுத்துகொள்ளும். நிரூபணமற்ற தருக்கங்களினாலான ‘அறிதல்களை’ கட்டிக்காத்துக்கொண்டு, நிரந்தரமாக அதிகார அல்லது மேட்டிமை வீம்பு பிடிக்காது. நிலையானதை தெளிந்தறிய நிலையற்ற நித்யத்தில் நெடுங்காலம் நிற்கத் தயங்காது.

சந்தை அறிவியல் அனைத்தும் சிந்தை அறிவியல் ஆகா.

*****

[பின்குறிப்பு: இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சாதக பாதக அறிவியல் செய்திகளுக்கு ஆதாரமான தரவுகள்/சுட்டிகள் என்று நான் உபயோகித்தவற்றை, வழக்கமாய் செய்வதுபோல, இம்முறை கொடுக்கவில்லை. பட்டியல் நீளம் என்பது ஒரு காரணம். வாசகர்கள் இக்கட்டுரை உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையை சந்தேகித்தால் (நிச்சயம் செய்யுங்கள்), இணையத்திலேயே அனைத்து தரவுகளையும் பெற்றுக்கொள்ளலாம். எனக்கும் எழுதலாம். சந்தை அறிவியலில் இருந்து விடுபட இவ்வகை சந்தேக சிறு மெனக்கெடல்கள் நம் அனைவருக்கும் அவசியம்தானே.]

[சொல்வனம் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையின் ஒரு வடிவம்]

பெயர் படு(த்து)ம் பாடு

Standard

தெய்வங்களுக்கு கோவிலில் ஆரத்தி எடுக்கையில் அப்பெயர் வரக் காரணம் கூறி அர்ச்சகர்கள் சிலாகிப்பார்கள். நாம் உச் கொட்டிக்கொண்டு மேலும் இரண்டு முறை கன்னத்தில் போட்டுக்கொண்டு வருவோம். அவ்வகையில் என் பெயர் காரணம் பற்றி பலர் எனக்குப் பற்றிக்கொள்ளும் அளவிற்கு ஊகித்து படுத்தி இருக்கிறார்கள். கன்னத்தில் போடவேண்டும் என்றுதான் தோன்றும். அவர்கள் கன்னத்தில்.

கேட்கும் அனைவரையும் அப்படிச் செய்யமுடியாது என்பதாலும் (காரணம் கடைசிவரியில்), இனிமேலும் இவ்வகையில் வேறுசிலர் படுத்துவார்கள் என்பதாலும், நானே ஒரு சுய பெயர் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று இதை எழுதிவைக்கிறேன்.
Continue reading

ஆர்செனிக் பாக்டீரியா தற்காலிக அடக்கம்

Standard

நமக்கு விஷமாகிய ஆர்செனிக் மூலக்கூறுகளை ‘உண்டு’ வாழும் பாக்டீரியாக்கள் நம் உலகில் உள்ளது என்று 2010இல் ஒரு அறிவியல் செய்தி வெளியாகியது. அமெரிக்காவின் நாஸா ஆராய்ச்சி மையத்திடம் மான்யம் பெற்ற ஃபெலிஸா உல்ஃப்-ஸைமன் மற்றும் விஞ்ஞானிகள் குழு கலிஃபோர்னியா மாநிலத்தின் மோனோ ஏரியின் சேற்றில் வாழும் GFAJ-1 என்று குறிப்பிடப்படும் நுண்ணுயிரை பரிசோதித்து அவைகளால் ஆர்செனிக்கை உண்டு வாழமுடியும் என்று ஊகித்தார்கள். அதனால், மரபணுவில் பாஸ்பரஸ் மூலப்பொருளுக்கு பதிலாக உபயோகித்துகொள்ளும் அளவிற்கு, நமக்கு விஷமாகிய, ஆர்செனிக்கை உட்கொள்ளும் நுண்ணுயிர்கள் உலகில் உள்ளது என்று 2010இல் “சயின்ஸ்” ஆராய்ச்சி சஞ்சிகையில் அறிவித்தார்கள். விஷ(ய)ம் கேள்விப்பட்டு அங்காடித்தெருவில் ஆர்செனிக்கை pet food பகுதிக்கு மாற்றினார்கள்.

ஆனால், ஃபெலிஸா வுல்ஃப்-சைமனால் ஆர்செனிக் சூழலில் தழைத்ததாக கருதப்பட்ட அதே பாக்டீரியாவினால் அடுத்த இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களின் மறு-பரிசோதனைகளில் (ஜூலை 2012 இம்முடிவுகள் வெளியாகின), அதே ஆர்செனிக் அதிகமான சூழலில், தழைக்கமுடியவில்லை. எவரது பரிசோதனைகள் தவறானவை? இன்றைக்கான சரியான புரிதல் எது? கட்டுரையில் விவரிப்போம்.

[எச்சரிக்கை: கட்டுரையில் படங்களோ, ஜோக்குகளோ, கிடையாது. சிட்டிகை ஆங்கில வாடை கலந்த நீண்ட விவரணை மட்டுமே.]
Continue reading

ஏலியன்ஸ் திவசம்

Standard

ஏலியன்ஸ், வளி-அறிவு-ஜீவராசிகள், பற்றி தமிழில் ஒரு அறிவியல் புத்தகம் பதிப்பாளரின் ஒப்புதலுடனேயே தொடங்கி, எழுதி முடித்து, அக்டோபர் 29, 2010 அன்று அளித்தேன். வெளிவராத அப்புத்தக வடிவிற்கு இன்று (அக்டோபர் 29, 2012) இரண்டாவது வருஷாப்திகம். திவசம்.

முதல் திவசத்தை மனதில் ஒட்டியிருந்த சில நல்லுணர்வு நம்பிக்கைகளால் விமர்சையாக கொண்டாட முயலவில்லை. புத்துயிர் ஊட்டி புத்தக வடிவை பதிப்பாளரிடம் கிடத்தினேன். இன்று இரண்டாவது திவசத்தை தடபுடலாக்க வேலைவெட்டியில்லாத அறிவு விழைந்தாலும் ஆகவேண்டியதை பார்க்கும் மனது கசப்பினால் கடந்துசென்றுவிட்டது. அதனால் எள்ளுருண்டை, சுவியன் சகிதமாய் ‘ஞானவாபியில்’ விமர்சையை தவிர்த்து, வீட்டில் சிம்பிளாய் கறிவேப்பிலை துவையல் மட்டும் செய்யச்சொல்லியிருக்கிறேன்.

என்னத்தான் மின்காந்த வெளியில் இரண்டடிமான எண்களாய் நிர்குணருபத்தில் அ-வைசேஷிகமாய் புத்தகம் தூலவடிவு பெற்றிருந்தாலும், லாப்டாப்பினுள்ளேயே பிணத்தை இரண்டு வருடமாய் வைத்திருந்தால் டைப் அடிக்கும் விரலும் நாறுகிறது. ஹார்ட்-டிஸ்க்கை ஃபார்மாட் செய்து, புனர்பூஜை, ஃபினாயில், போட்டு மறுவாழ்வு கொடுத்துள்ளேன்.
Continue reading

என் புத்தகம்

Standard

என் புத்தகம் ஒன்று பிரசுரமாகியுள்ளது.

பதற்றமடையாமல் மேலும் வாசியுங்கள். Ane Books நிறுவனம் இந்தியாவிலும் (சார்க் நாடுகளிலும்), CRC Press நிறுவனம் உலக அளவிலும் வெளியிட்டுள்ளார்கள். அமேஸான் சந்தையிலும் வாங்கலாம்.

ஆய்வாள பேராசிரியர்கள் வழங்கியுள்ள இரண்டு அணிந்துரைகள், என் முகவுரை, நன்றியுரை மற்றும் உள்ளடக்கப் பட்டியல் அனைத்தையும் இந்தச் சுட்டியில் தொடங்கி வாசிக்கலாம் — http://arunn.me/arunn/pm-book/

இனி சார்ந்த நகைச்சுவை…
Continue reading

இது விஷ்ணுபுரம் விமர்சனமல்ல

Standard

தேற்றுவாய் (சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்):

ஏற்கனவே ஒருமுறை விஷ்ணுபுரம் அறிமுகம் என்று மகளை விஷ்ணுபுரம் நாவலின் பின்னட்டை நாலுவரி மிகையை வாசிக்கச்சொன்னதை ஒரு அனுபவப்பகிர்வாய் வெளியிட்டேன். இது யோக்கியமான விமர்சனமல்ல என்று பதில் கிடைத்தது (விஷ்ணுபுரம் ஆசிரியரிடமிருந்து அல்ல). அது விமர்சனமே இல்லையே, பிறகுதானே அதன் யோக்கியத்திற்கான வழக்கு என்றாலும், தமிழ்நாட்டின் நகைச்சுவை உணர்வு தட்டுப்பாட்டில் இப்படிக் ‘கடுகு’ அளவேனும் நானும் அடிவாங்குவது சகஜம். எதற்கு இரண்டாம் முறையும் பொல்லாப்பு என்றே இக்கட்டுரையின் தீவிரம் வெளிப்படையாகத் தெரியுமாறு நகைச்சுவையாகத் தலைப்பு வைத்துள்ளேன். பார்த்துச் செய்யுங்கள். இனி.
Continue reading

வந்தாயிற்று, போய்…

Standard

வந்தாயிற்று

அடுத்து ஓர் பிறப்பு, அடுத்து ஒர் மரணம்
அடுத்தும் பிறந்து, கருப்பையில் உறக்கம்
இதுவே சம்சாரம், முடிவிலா சாகரம்
கிருபையில் திளைக்க, முராரியை துதிக்க

கவிதைகள் எழுதப்படுகின்றன
அதன்பின் படிக்கப்படுகின்றன
படிக்கப்பட்ட விஷயங்கள் மீண்டும் எழுதப்பட்டு
படிக்கப்படுகின்றன.

சரிதான்,
வருவதற்கு முன் உயிருடன் தப்பமுடியவில்லை
வந்துவிட்ட பின் என்ன செய்ய?
உயிருடன் விடுதலையில்லை.

மொத்தத்தில்
சொல்லிக்கொள்கிற மாதிரி ஒன்றும் இல்லை
போய்வருகிறேன், போய்
வரலாம்

ராமுவும் சோமுவும்

Standard

(பேயோன் தூண்டலில், குழந்தைகளுக்கான கதை)

ராமுவும் சோமுவும் உயிர் நண்பர்கள். ஒரு நாள் இருவரும் காட்டு வாக்கில் நடந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு பயங்கர கரடி எதிரில் வந்தது. இருவரும் பயந்து ஓடத் துவங்கினர். கரடி அவர்களை விடாமல் துரத்தியது. ராமு நண்பனை விட்டு ஒரு மரத்தின் மீது ஏறித் தப்பித்தான். சோமுவிற்கு மரம் ஏறத் தெரியாது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு இறந்தது போல் நடித்தான். கரடி அவன் முகத்தருகே முகர்ந்து பார்த்தது. பசியாற அவனைக் கடித்துத் தின்றது. மரத்தின் மீதிருந்த ராமுவைப் பார்த்து, “செத்த மாமிசத்தை நான் சாப்பிட மாட்டேன் என்று ஊரில் எவன் உளறியது?” என்று கேட்டுவிட்டு அகன்றது.

சற்றே ‘சுவையான’ அறிவியல் கட்டுரை

Standard

பிஸ்கெட் விள்ளலை காப்பியில் ஊறவைத்து சுவைப்பது என் போன்ற ’நோ-பல்’ இளைஞர்களின் கொணஷ்டை (கரும்பை கூட ஜூஸ் செய்தே அருந்துவோம்). அனுபவித்து செய்பவர்களுக்கே இதிலுள்ள சகாயங்களும் சங்கடங்களும் தெரியும். சற்றே மொறுமொறுப்புடன், சூடாய், இதமாய், நாக்கில் பிஸ்கெட் கரைவது சகாயம். சௌக்கியம். குறிப்பிட்ட அவகாசத்திற்குமேல் முக்கியிருந்தால், சங்கடம். சொதசொதத்த பிஸ்கெட், வாயிலிட முனைகையில் ஸ்லோமோஷனில் மடிந்து ‘ஸ்பளச்’ என்று காப்பியினுள் விழுந்துத்தொலைக்கும். ‘முக்கிய’ஸ்தர்கள் கூடியிருக்கும் டிஸ்கஷனில், அல்லது ‘பெண் பார்க்கும்’ வைபவத்தில்.
Continue reading

சில்லறை உதாசீனம்

Standard

தமிழ் இணைய, அச்சு ஊடக சூழலில் பெரும்பாலும் அடுத்தவரது நேரத்தையும் உழைப்பையும் உதாசீனப்படுத்துவது ஒரு முக்கியமான பொழுதுபோக்கு. ஆய்வறிக்கை, கட்டுரை மற்றும் புத்தகத்திற்கான சம்பந்தப்பட்ட எழுதுபவரின் அறிவுத்துறையின் தேர்ச்சி, உழைப்பிற்கேற்ப, மேற்படி உதாசீனத்தின் வீரியம் மாறுபடும். அதிகம் உழைத்தால் அதிகமான உதாசீனம் என்கிற நேர்மையான விகிதத்தில்.

வாசகர்களின் பங்களிப்பும் இதில் முக்கியம் என்றாலும் அதைத் தற்சமயம் புறந்தள்ளுவோம். தமிழில் அறிவியல் மாநாடு நடத்துபவர்கள், புத்தகப் பதிப்பாளர்கள், அச்சு இதழாளர்கள், இணைய சிறுபத்திரிகையாளர்கள் என்று பாகுபாடின்றி மேற்படி பொழுபோக்கை மேற்கொள்பவர்களின் கருத்தொருமித்த செயல்பாடு அலாதி. பெருமைப்பட ஒரு சூலாதி இயற்றலாம். மரியாதைக்குரிய விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு. ஆனால் இவை தராசை சமன்செய்யமுடியாத சிறுபான்மை என்பது என் அனுபவம். இலக்கியமீதியான என் சொற்ப அனுபவப் பட்டியலிலிருந்து இன்றைக்கான ஒரு சாதா எடுத்துக்காட்டிலேயே இதை அறியமுடிகிற நுண்ணறிவு உங்களுக்கும் இருக்கும். சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
Continue reading

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே

Standard

கல்லூரியில் உடன் படித்தவள் நேற்று மதியம் இறந்துவிட்டாள். பத்து வருடம் முன்னர் கீமோவில் போயேபோச்சு என்றிருந்த கான்சர் கடந்த மாதங்களில் ரிலாப்ஸ். கொண்டுபோயேபோச்சு.

கிட்டத்தட்ட இருபது வருடம் கழித்து, சென்ற வருடம் சந்திக்கையிலும் களையான முகத்துடன் இனிமையாக அமைதியாக பேசினாள். இருபது வருடம் முன்னர் “உன் அழகின் ரகசியம் பீமபுஷ்டி லேகியம் தானே” என்பது போன்று ஏதோ கடலை வறுத்திருப்பேன். கிளரொளி இளமை. சென்ற வருடம் சந்திக்கையில் அவ்வாறே பேசத் தயக்கம். டக்-இன் செய்த முழுக்கை சட்டை பேண்டினுள் அல்லவா இருக்கிறேன். தலையை வருடி சௌக்கியமா என்று கேட்கவே தோன்றியது. அதையும் செய்யவில்லை.

ஹாய் என்றவளிடம், வாயிலிருந்த பாராட்டை எச்சிலுடன் விழுங்கி, ஹாய், … எங்கிருக்கிறாய் இப்போது? மாரீட்? (யெஸ், உனக்கே ஆய்டுத்து எனக்காகாதா) என்றெல்லாம் ஆண்மையின் திடம் பரிமளிக்க கேள்விகளால் அளவளாவி, நான் இப்போது வசிக்கும் ஊரில், சொற்ப கிலோமீட்டர்கள் அருகிலேயே இருக்கிறாள் என்றும் தெரிந்துகொண்டேன். எப்படியும் யூஸ் பன்னமாட்டோம், மறந்த்ருவோம் என்றபடி, மொபைல் எண்கள் பறிமாறிக்கொண்டு அகன்றோம்.
Continue reading