ராமுவும் சோமுவும்

Standard

(பேயோன் தூண்டலில், குழந்தைகளுக்கான கதை)

ராமுவும் சோமுவும் உயிர் நண்பர்கள். ஒரு நாள் இருவரும் காட்டு வாக்கில் நடந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு பயங்கர கரடி எதிரில் வந்தது. இருவரும் பயந்து ஓடத் துவங்கினர். கரடி அவர்களை விடாமல் துரத்தியது. ராமு நண்பனை விட்டு ஒரு மரத்தின் மீது ஏறித் தப்பித்தான். சோமுவிற்கு மரம் ஏறத் தெரியாது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு இறந்தது போல் நடித்தான். கரடி அவன் முகத்தருகே முகர்ந்து பார்த்தது. பசியாற அவனைக் கடித்துத் தின்றது. மரத்தின் மீதிருந்த ராமுவைப் பார்த்து, “செத்த மாமிசத்தை நான் சாப்பிட மாட்டேன் என்று ஊரில் எவன் உளறியது?” என்று கேட்டுவிட்டு அகன்றது.